சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பஸ்களில் முன்பதிவு இன்று அதிகாலை முதல் தொடங்கியது. இதையடுத்து ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நவம்பர் 4ம் தேதி வருகிறது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை பெரும்பாலனோருக்கு விடுமுறையாக இருக்கும். பிறகு சனி, ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை உள்ளது. அரசு விரைவு பஸ்களில் 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. அதாவது www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்சிடி செயலி போன்றவற்றை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல் தனியார் முன்பதிவு வலைதளங்கள் மற்றும் செல்போன் செயலிகள் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.