செங்கல்பட்டு: தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வாரத்தில் இறுதி நாட்களில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதன்படி, இன்று காலை அவர் சைக்கிளில் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்துக்கு வந்தார். அவருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நட்டார். இதையடுத்து கடந்த தேர்தலின்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் சிறப்பாக செயல்பட்ட குற்றப்பிரிவு காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகை வழங்கினர்.