சென்னை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கட்சி பதவிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டவர் ராஜா என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதனை திறம்பட செய்து முடிக்கக்கூடியவர் வீரபாண்டி ராஜா என்று மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.