பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவிற்கு காவல் நீட்டிப்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மூன்று போக்சோ வழக்குகளின்கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், சிவசங்கர் பாபாவை சென்னை சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்மீது உள்ள வழக்குகள் குறித்து, அவரை விசாரிக்க, போதுமான கால அவகாசம் இல்லாததால்  காவல்நீட்டிப்பு வழங்க கோரி போக்சோ நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். வழக்கை விசாரித்த சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவிற்கு வரும் 13ம் தேதி வரை காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories: