சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கடந்த 2016ம் ஆண்டு எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, வைகோ, திருமாவளவன் ஆகியோர் மீது சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்.பி.மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.