ஈரோட்டில் நாட்டுக்கோழி மோசடி வழக்கில் நிறுவன உரிமையாளர்களில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!!

கோவை: ஈரோட்டில் நாட்டுக்கோழி மோசடி வழக்கில் நிறுவன உரிமையாளர்களில் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் என 14 பேரிடம் ரூ.40.56 லட்சம் மோசடி செய்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏற்கனவே பிரகாஷ் என்பவருக்கு 10 ஆண்டு சிறை விதித்த நிலையில் அவரது சகோதரர் மகேஷுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. காரமடை ராஜன் என்பவர் அளித்த புகாரில் கோவை முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Related Stories: