சென்னை: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என குலாம் நபி ஆசாத் ஊடகங்கள் வாயிலாக கூறியிருப்பது கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகரித்திருப்பதை அடுத்து கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் ஊடகங்கள் வாயிலாக கட்சி தலைமைக்கு இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.