நெல்லை: தாமிரபரணி - நம்பியாறு வெள்ள நீர் கால்வாய் பணிகளை ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தாமிரபரணி - நம்பியாற்றை இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் பாலப் பணிகள் நடந்து வருகின்றன.இந்தப் பணிகளை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் ஆய்வு செய்தார்.பொன்னாக்குடி நான்கு வழி சாலையில் நடக்கும் வெள்ளநீர் கால்வாய் பாலப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.