சென்னை: விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த அரசு விரைவு பஸ் நேற்று காலை திருச்சியில் இருந்து, சென்னை நோக்கி வந்தது. கோயம்பேடு 100 அடி சாலை வழியாக வந்தபோது, பேருந்தின் இன்ஜினிலிருந்து அதிகளவு கரும்புகை எழுந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், ஓட்டுனரிடம் இதுபற்றி தெரிவித்தனர். இதையடுத்து, ஓட்டுனர், பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தினார். அப்போது, திடீரென பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த பயணிகள், அலறியடித்தவாறு தங்களது பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு பஸ்சில் இருந்து, இறங்கி ஓடினர். இதனால், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. சிறிது நேரத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது.