மதுரை : ரவுடிகளை அடக்கி ஒடுக்கி நடவடிக்கை எடுப்பதில் ஜெயலலிதாவை போலவே முதல்வர் மு.க.ஸ்டாலினும் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டியுள்ளார்.மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதிகள் சார்ந்த பணிகளை விரைவுபடுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கோரிக்கை மனு அளித்தார். பின்னர் மாநகராட்சி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சி காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அதே போல் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சிகளை எடுத்து வருவதாகவும் இது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.