கடற்கொள்ளையர் அட்டூழியம்: 3 மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன்கள் சிவா(34), சிவக்குமார்(32). மீனவர்கள். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பேர், சிவக்குமாரின் படகில் ஏறி 3 பேரையும் அரிவாளால் வெட்டினர். பின்னர் படகிலிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 400 கிலோ வலை, மீன்களை பறித்து சென்றனர்.

Related Stories: