மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்திவந்த பெண் உள்பட 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வந்த பிளை துபாய் ஏர்லைன்ஸ் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை நடத்தி அனுப்பிவைத்தனர். திருச்சியை சேர்ந்த ஒரு பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது எதுவும் இல்லை. இதையடுத்து அந்த பெண்ணை விமான நிலையத்தில் அறைக்கு அழைத்துச்சென்று பெண் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது உள்ளாடைகளுக்குள் தங்க வளையல்கள் மறைத்துவைத்திருந்தார்.