கள்ளக்காதலியை அபகரிப்பதில் மோதல்: வாலிபர் கழுத்தறுத்து படுகொலை: இளம்பெண், கள்ளக்காதலன் கைது: வயிற்றில் வளரும் குழந்தைக்கு 2 பேரும் சொந்தம் கொண்டாடினர்; பரபரப்பு தகவல்

சேலம்: சேலம் அருகே கள்ளக்காதலியை அபகரிப்பதில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வயிற்றில் வளரும் குழந்தைக்கு 2 பேருமே சொந்தம் கொண்டாடியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகேயுள்ள அயோத்தியாப்பட்டணம் ராம்நகர் காலனியை சேர்ந்தவர் முருகேசன். மனைவி இறந்ததால், அதே ஊரை சேர்ந்த கலைமணி ( 23) என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த கலைமணி ஏற்கனவே 2 பேருடன் வாழ்ந்து வந்தவர் என்று கூறப்படுகிறது. 3வதாக முருகேசனை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் கலைமணிக்கும், அதே ஊரைச் சேர்ந்த கலையரசன் (23) என்பவருக்கும் கள்ளத்ெதாடர்பு ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். கணவர் முருகேசனுக்கு தெரியாமல் கலையரசன் கலைமணிக்கு தாலிகட்டி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கலைமணி நூல்மில்லுக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கு வேலைக்கு வந்த அயோத்தியாப் பட்டணம் ராம்நகர் காலனியை சேர்ந்த கிருபைராஜ் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் முருகேசனுக்கும், கலையரசனுக்கும் தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்தனர். கலைமணியோ, கிருபைராஜுக்கு தெரியாமல் கலையரசனுடனும், கலையரசனுக்கு தெரியாமல் கிருபைராஜூடனும் உல்லாசமாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் கிருபைராஜுக்கும், கலையரசனுக்கும் தெரியவந்தது. எனது மனைவியுடன் இருக்கும் தொடர்பை கைவிட்டு விட வேண்டும் என கலையரசன் எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் கலைமணி கர்ப்பமானார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தான் தந்தை என கலையரசனும், இல்லை இல்லை நான் நான் தகப்பன் என கிருபைராஜூம் போட்டிப்போட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை கலைமணியும், கிருபைராஜூம் உடையாப்பட்டி பக்கமுள்ள கந்தாஸ்ரமம் பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று உல்லாசமாக இருந்தனர். அப்போது, கலைமணியை திருமணம் செய்து ெகாண்டு வாழப்போவதாகவும், வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தான் தந்தை எனவும், இனிமேல் கலைமணியுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது எனவும் கலையரசனை கிருபைராஜ் போன்போட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு “இனிமேல் கலைமணியுடன் உள்ள தொடர்பை விட்டுவிடுவதாக’’ கலையரசன் கூறியுள்ளார். அப்படியானால் நேரில் வந்து கலைமணியிடம் கூறிவிடு, இப்போது கந்தாஸ்ரமம் பகுதியில் இருக்கிறோம் என கிருபைராஜ் கூறியுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த கலையரசன், கிருபைராஜை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கத்தியுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு கலைமணியும், கிருபைராஜூம் இருந்தனர். கலைமணி மீது கைபோட்டுக் கொண்ட கிருபைராஜ், இனிமேல் எந்த தொடர்பும் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். “நான் தாலி கட்டிய மனைவி மீது கைப்போட்டுக்ெகாண்டு என்னை மிரட்டுகிறாயா?’’ என கூறிக்கொண்டு கிருபைராஜை கலையரசன் தாக்கியுள்ளார். அப்போது இருவரும் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர். இதில் கலையரசன் தலையில் காயம் ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த அவர் ஏற்கனவே தயாராக வைத்திருந்த கத்தியால் கிருபைராஜை குத்தினார். கீழே விழுந்த கிருபைராஜின் கழுத்தை அறுத்துள்ளார். இந்த மோதலில் இருவரையும் கலைமணி தடுத்துள்ளார். என்றாலும் சிறிது நேரத்தில் கிருபைராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். கிருபைராஜ் மீது கலைமணிக்கு அதிக ஆசை இருந்துள்ளது. இதனால் அவரது சடலத்தை மடியில் போட்டுக்கொண்டு கதறி அழுதார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். கலையரசனையும், கலைமணியையும் பிடித்து விசாரணை நடத்தினர். இன்று இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், `கலைமணியின் நடவடிக்கை சரியில்லாததால் கணவர் முருகேசன் எப்படியும் போகட்டும் என கண்டுகொள்ளவில்லை.

ஆனால் கலைமணி கணவருக்கு தெரியாமல் 2 வாலிபர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இவர்களையும் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் என உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். கலையரசனுடன் தாலி கட்டியுள்ளார். நாளடைவில் கிருபைராஜ் மீது ஆசை அதிகமானது. கலையரசனை கழற்றிவிட முடிவு செய்துள்ளார். தனது வயிற்றில் வளரும் குழந்தை கிருபைராஜுடையது என கூறுகிறார். இதன் காரணமாகத்தான் உடலை மடியில் போட்டு அழுதுள்ளார். என்றாலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: