புதுக்கோட்டையில் சுரங்கப்பாதையில் மருத்துவர் உயிரிழந்ததை அடுத்து சுரங்கப்பாதை மூட உறுதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி மருத்துவர் உயிரிழந்ததை அடுத்து சுரங்கப்பாதை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபானி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுரங்கப்பாதையை மூடுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக ஏற்கனவே மூடப்பட்டுள்ள ரயில்வே கேட் பாதை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: