திருவில்லிபுத்தூர்,: சிறுமிகளிடம் பலாத்காரம் தொந்தரவில் ஈடுப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட் அதிரடி உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (58). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் மீது கடந்த 2016, நவ.28ல் ஆறு வயதுடைய 2 சிறுமிகளை கடத்தி, சிறுமிகளிடம் பலாத்காரம் சம்பவத்தில் ஈடுப்பட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் 366 (பாலியல் தொல்லைக்காக கடத்திச் செல்லுதல்), 342 (சட்டவிரோதமாக தடுத்தல்), 506(2) (கொலை மிரட்டல் விடுத்தல்) மற்றும் போக்சோ சட்டத்தின் இரு வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து நடராஜனை கைது செய்தனர்.