மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வந்த ரூ.65 லட்சம் மதிப்புடைய 1.34 கிலோ மதிப்புடைய தங்க பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒரு இளம்பெண், தனது உள்ளாடைக்குள் தங்க பேஸ்ட் மறைத்து வைத்து எடுத்து வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலைய சுங்க துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அதிகாரிகள், விமானத்தில் வந்த பெண் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.