செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே கஞ்சா விற்பனை செய்வதில் இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவர் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த எருமையூரை சேர்ந்த பட்டதாரி இளைஞரான வெற்றிவேல் என்பவரை நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கொடூரமாக கொலை செய்தனர். அவரது தலையை மட்டும் சோமங்கலம் அருகே வீசிவிட்டு சென்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் சோமங்கலம் காவல்துறையில் தகவல் தெரிவித்தனர். போலீசார் வெற்றிவேல் தலையை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உடலை தேடி வந்தனர்.