திருவெறும்பூர்:திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன சமுதாய கூடத்தில், 88 பேருக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார்.நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இல்லாமல் அனைவரது கருத்துகளையும் ஏற்று உதவிகளை செய்து வருகிறோம். வாக்குரிமையே இல்லாத இலங்கை தமிழர்களுக்கும் தமிழக முதல்வர் ரூ.317 கோடி வழங்கியுள்ளார். இந்த தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்று அமைச்சராக இருக்கிறேன். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்’ என்றார்.