திருச்சுழி: திருச்சுழி அருகே மறவர் பெருங்குடியில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. இங்கு மறவர் பெருங்குடி, மீனாட்சிபுரம், வெள்ளையாபுரம், கல்லுப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியின் கழிப்பறையில் தண்ணீர் வசதி போதுமானதாக இல்லை என பெற்றோர்கள் கூறுகின்றனர். பள்ளியில் இருந்து சுமார் 50 அடி தூரமுள்ள மேல்நிலை தொட்டிக்கு சென்று வாளியில் தண்ணீர் எடுத்து வந்து கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.