மதுரை : அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதால் வருத்தம் இல்லை என்று அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியிடன் போட்டியிட்ட பாமக, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்தது. இதற்கு பாஜவின் அமித்ஷா, இந்தி மொழியை தொடர்ந்து புகழ்வதும், தமிழகத்துக்கு எதிரான பல்வேறு பாஜ நடவடிக்கைகளை கண்டித்தும், கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்காததாலும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.