திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம், இந்தோ ஜெர்மன் ஆகியவை இணைந்து கொரோனாவால் பாதித்த குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு ரூ.1500 மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் சீ.காந்திமதிநாதன் தலைமை வகித்தார். ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன செயலாளர் ஸ்டீபன் முன்னிலை வகித்தார்.