காட்டுமன்னார்கோவில்,: திருச்சி மாவட்டம் திறுவெறும்பூர் தாலுகா வடக்கு தேனீர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சூரியமூர்த்தி (28). இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி பாய் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடத்தி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.