குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் 42 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு குடியிருப்பு கட்டிடத்தை, பராமரிப்பு பணி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜிலியம்பாறையில் காளியம்மன் கோவில் அமைந்துள்ள சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கோயில் எதிரே கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலர் தங்குவதற்கு அரசு குடியிருப்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. நாளடைவில் போதிய பராமரிப்பு இன்றி இருந்ததால் கட்டிடங்கள் விரிசல் விட தொடங்கியது. கட்டிடங்கள் பழுந்தடைந்த நிலையில் காணப்பட்டதால் குடியிருப்பு பயன்பாட்டை தவிர்த்தனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு இல்லாமல் இக்கட்டிடம் இருந்து வருகிறது.