சென்னை: தமிழக சட்டப் பேரவையில் சபாநாயகர் மு.அப்பாவு கடைசி நாளான நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது: பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றப் பேரவை உறுப்பினர்களாக- ஈ.ஆர்.ஈஸ்வரன், ஆர்.கணேஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றப் பேரவை- ஆர்.இளங்கோ, அப்துல் சமது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றப் பேரவை உறுப்பினர்களாக அ.வெங்கடேசன், பூமிநாதன், ஊர்வசி அமிர்தராஜ், வி.வி.ராஜன் செல்லப்பா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்றப் பேரவை உறுப்பினர்களாக எம்.சி.சண்முகையா, சதன் திருமலைக்குமார், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றப் பேரவை- டி.ராமச்சந்திரன், ரா.அருள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆட்சிமன்றப் பேரவை உறுப்பினர்களாக நா.எழிலன், கணபதி, தமிழ் பல்கலைக்கழகம் ஆட்சிமன்றப் பேரவை உறுப்பினர்களாக டி.கே.ஜி.நீலமேகம், நா.பிரபாகரன், சென்னை பல்கலைக்கழக ஆட்சி மன்றப்பேரவை- அ.வெற்றியழகன், வி.ஜே.ராஜேந்திரன், ஜோசப் சாமுவேல், ஐட்ரீம் ரா.மூர்த்தி, கோ.செந்தில்குமார், கு.மரகத குமரவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.