திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் திருத்தணியில் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் எம்எல்ஏக்கள் திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேஷன், ஒ.ஏ.நாகலிங்கம், கே.திராவிடபக்தன், எஸ்.கே.ஆதாம், மா.ராகு, சரஸ்வதி சந்திரசேகர், இ.கே.உதயசூரியன், பி.ரவீந்திரநாத், கே.யு.சிவசங்கரி, ப.சிட்டிபாபு, எம்.பன்னீர்செல்வம், மு.நாகன், பொதுக்குழு உறுப்பினர் வி.சி.ஆர்.குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக திருத்தணி நகரச் செயலாளர் வி.வினோத்குமார் வரவேற்றார். இந்த கூட்டத்தில் திமுக முப்பெரும் விழாவில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணுவிற்கு கலைஞர் விருது வழங்க தேர்வு செய்த திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நாளை (செப்டம்பர் 15ம் தேதி) திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை திருத்தணியில் காணொலி காட்சி மூலம் கண்டுகளித்திட அனைவரும் கலந்து கொள்வது, வருகின்ற 20ம் தேதி வேளாண் தடைச் சட்டம் மற்றும் பெட்ரோல், காஸ் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் திருத்தணி நகராட்சி புதிய பேருந்து நிலைய பணிகள் தொடங்கவேண்டும்.