முசாபர்நகர்: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்துக்கு எதிராக பீகார் நீதிமன்றத்தில் இஸ்லாமிய சமூகத்தினர் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், குஷிநகரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘‘உத்தரப் பிரசேத்தில் 2017ம் ஆண்டு பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் தான் பொது விநியோகத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக மாறியது. அதற்கு முன் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை ‘அப்பா ஜான்’ என்று கூறுபவர்கள் தான் சாப்பிட்டார்கள்,’’ என்றார்.