துரைப்பாக்கம்: பனையூர் குடுமியாண்டி தோப்பு பகுதியை சேர்ந்த மலைராஜன் (48), பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில், குடிசை அமைத்து ஓட்டல் நடத்தி வருகிறார். இங்கு சமையல்காரர் உள்பட 5 பேர் வேலை செய்கின்றனர். நேற்று வழக்கம்போல், ஊழியர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கணேசன் என்ற ஊழியர் அப்பளம் பொரிப்பதற்காக எண்ணெயை சூடுபடுத்தியபோது, எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிய தொடங்கியது.
காற்றில் தீ மளமளவென ஓட்டல் முழுவதும் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்.