விகாராபாத்: வான்வழி மருந்துகள் திட்டத்தை உலக பொருளாதார மன்றம், நிதி ஆயோக் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் ஹெல்த்நெட் குளோபல் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் தெலங்கானா மாநில அரசு தொடங்கி உள்ளது. இதனை ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமீபத்தில் அமல்படுத்திய டிரோன் விதிகள், அவற்றின் பயன்பாட்டினை மிகவும் எளிமையாக்கி உள்ளன.