திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம், கழக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் தன்யா மார்ட்டின். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜீபன் குமார் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜீபன் குமார் உக்ரைனில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா காரணமாக அவரால் இந்தியாவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தன்யா மார்ட்டின், ஆன்லைனில் சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் பதிவு திருமணம் செய்ய அனுமதி கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் முகம்மது முஸ்தாக், கவுசர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் ஆன் லைன் மூலம் பதிவு திருமணம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.