சென்னை: பொதுவாக, சளி மாதிரிகள் மூலம் உடலில் வைரஸ் மரபணு உள்ளதா என்பதை ஆர்டிபிசிஆர் ஆய்வின் மூலம் அறியலாம். அதேவேளையில், வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உடலில் உருவாகியிருக்கிறதா என்பதை ரத்த மாதிரிகளைக் கொண்டுதான் அறிந்து கொள்ள இயலும். ரேபிட் கிட் வாயிலாகவும், எலிசா, சிஎல்ஐஏ போன்ற பரிசோதனை மூலமாகவும் இது கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் அத்தகைய துரித பரிசோதனை மற்றும் பிசிஆர் உபகரணங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் மருந்து தரக் கட்டுபாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தன.