மதுரை: தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன்(ஓய்வு), பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டுமென ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நீதிபதிகள், விரிவான உத்தரவுக்காக தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர். பின்னர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: உலகிலேயே தமிழ் தான் பழமையான மொழி என்பதற்கு அறிவியல்பூர்வமாக ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளன. தெய்வங்கள் உள்ளூர் மொழிகளை புரிந்து கொள்ளாது என்று கூறமுடியாது.