சென்னை: இந்திய அரசின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய கடலோர காவல் படை கப்பல் விக்ரஹா ரோந்து கப்பல், சென்னையில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கப்பல் கடந்த 6ம் தேதி விசாகப்பட்டினம் சென்றது. இதையடுத்து, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கப்பல் ஐசிஜிஎஸ் விக்ரஹா கிழக்கு பிராந்தியத்தின் ஐசிஜி கடற்படையில் சேர்ந்துள்ளது மற்றும் கிழக்கு கடற்பரப்பின் பரந்த கடற்கரையில் இந்திய கடலோர காவல்படை நடவடிக்கைகளுக்கு ஒரு பெரிய இடத்தை நிரப்பும்.