மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.11.48 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி, வாலிபரை கைது செய்தனர். சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 9.50 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டு அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு வாலிபர், சிறப்பு விசாவில் துபாய் செல்ல வந்தார். அவர் ஒரு அட்டை பெட்டி வைத்திருந்தார். அதில் என்ன இருக்கிறது என்று பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டனர். வடாம், அப்பளம் போன்ற உணவு பொருட்கள் இருப்பதாக கூறினார். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.