சென்னை: சென்னை சர்வதேச விமான நிலைய சரக்ககத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் சரக்கு விமானத்தில் இருந்த 15 பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தபோது இந்திய நட்சத்திர ஆமைகள் இருந்தன. மொத்தம் 2,247 நட்சத்திர ஆமைகள் இருந்தன. அதன் மதிப்பு ₹25 லட்சம். இதையடுத்து கைப்பற்றப்பட்ட நட்சத்திர ஆமைகள், வேளச்சேரி வன உயிரின பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், வேலூர் மாவட்டம் குடியாத்ததைச் சேர்ந்த வினோத்(25) என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.