சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர், சிறுபான்மையினர் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அம்பத்தூர் தொகுதி உறுப்பினர் ஜோசப் சாமுவேல்(திமுக) பேசியதாவது: கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அம்பத்தூர் தொகுதி பாழ்பட்டு கிடக்கிறது. அதை சிறப்பான தொகுதியாக மாற்றித் தர கேட்டுக் கொள்கிறேன். சென்னை - திருத்தணி - ரேணிகுண்டா நெடுஞ்சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயரை சூட்ட கேட்டுக் கொள்கிறேன். அம்பத்தூர் தொகுதியில் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட உழவர் சந்தை சிதிலமடைந்துள்ளது.