கோவை: கோவை அருகே சாலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது. கோவை சின்னியம்பாளையம் அருகே சாலையோரம் ஒரு பெண் விபத்தில் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது 4, 5 வாகனங்கள் ஏறியதால் அந்த பெண்ணின் உடல் உருக்குலைந்த நிலையில் இருந்தது. முதற்கட்டமாக போலீசார் இது சாலை விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தனர்.