வேளச்சேரி: பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில், கடலில் குளிப்பதால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிப்பவர்கள் விடுமுறை நாட்களிலும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் சென்னைக்கு சுற்றுலா வரும்போதும் மெரினாவுக்கு அடுத்தபடியாக பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு வருவது வழக்கம். இவ்வாறு வருபவர்களில் பலர் கடலில் குளிக்கின்றனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடந்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் கடலில் குளித்து வருகின்னர்.