போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க கோரி ஏஐடியுசி இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: ஏஐடியுசி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஏஐடியுசி சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடக்கிறது. இதில், ‘அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திட வேண்டும். அனைத்து சங்கங்களின் கோரிக்கையினை ஏற்று வரவு செலவு ஈடுகட்டும் நிதியினை வழங்கிட வேண்டும். ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்திட வேண்டும். அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 6 ஆண்டுகால அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமலாக்கிட வேண்டும். ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு விரிவுபடுத்திட வேண்டும். 2003க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களை ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்திட வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது.

Related Stories: