காஞ்சிபுரம் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களுக்கு புதிதாக 8 அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞராக கார்த்திகேயன், அரசு வழக்கறிஞராக ரமேஷ், காஞ்சிபுரம் விரைவு தடம் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் அரசு குற்றவியல் வழக்கறிஞராக சத்தியமூர்த்தி. காஞ்சிபுரம் முதன்மை சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக ரமேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காஞ்சிபுரம் கூடுதல் சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் குற்றவியல் வழக்கறிஞராக பார்த்தசாரதி, முதன்மை மாவட்ட உரிமையியல் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக செல்வம், உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக வேல்முருகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: