பழநி: பழநி அருகே டிகேஎன் புதூர் கிராமத்தில் ஓராண்டிற்கு மேலாக பாலப்பணிகள் முடங்கிக் கிடக்கிறது. அதை துரிதப்படுத்தி பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். பழநி அருகே ஆயக்குடியில் இருந்து ரூக்குவார்பட்டி செல்லும் சாலையில் டிகேஎன்புதூர் பகுதியில் சிறுபாலம் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டது. ஆமை வேகத்தில் இப்பணி நடந்தது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் இப்பாலத்தில் மோதி விபத்திற்குள்ளாகி வந்தனர். கடந்த ஓராண்டிற்கு முன்பு டூவீலரில் சென்ற நபர் சீரமைப்புப்பணி நடப்பது தெரியாமல் பாலத்தில் மோதி உயிரிழந்தார்.