இலுப்பூர்: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. இவர் நேற்றுமுன்தினம் மதியம் வீட்டில் சமைப்பதற்காக வீட்டிற்கு அருகில் அடுக்கி வைத்திருந்த விறகை எடுக்க சென்றார். அப்போது விறகுக்குள் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.