சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பண்ருட்டி தொகுதி உறுப்பினர் வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) பேசுகையில், ‘‘பண்ருட்டி தொகுதியில் சுமார் 60,000 மக்கள் வசிக்கிறார்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும், 40 ஆண்டுக்கு முன்பு வீதிகளில் பைப் லைன் அமைத்து குடிநீர் செய்யப்பட்ட முறையும் இருந்து வருகிறது. இதனை மாற்றி அமைத்து சீரான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.