சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மதுரை மேற்கு தொகுதி அதிமுக உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில், “மதுரை மேற்கு தொகுதியில் எந்த ஒரு அரசு கல்லூரியும் இல்லை. அதனை கருத்தில் கொண்டு கூடுதலாக கல்லூரி அமைக்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், “உறுப்பினர் 10 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்து இருக்கிறார். அப்படி 10 வருடம் இருந்து தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லாதது ஆச்சரியமாக தான் இருக்கிறது. கல்லூரி ஆரம்பிப்பது சாதாரண விஷயம் இல்லை. . இதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாரும் அரசு அறிவியல், கலை கல்லூரி வேண்டும் கேட்கிறார்கள்.