சென்னை: சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களான சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே மகளிர் அமைப்பின் சார்பில் சானிடரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை மகளிர் அமைப்பின் செயலாளர் கிருஷ்ணவேனி சலாம் நேற்று துவக்கி வைத்தார். தேவைப்படுவார் ரூ.5 நாணயம் போட்டால் ஒரு நாப்கின் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த இயந்திரம் அமைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.