சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டனர். டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். தமிழக மக்கள் தொகையின் அடிப்படையில் தடுப்பூசி வழங்க ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியறுத்த உள்ளேன்.