சென்னை: கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின், சென்னையில் இருந்து லண்டனுக்கு சென்ற முதல் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் 162 பயணிகளுடன் ஒன்றரை மணி நேரம் தாமதமாக நேற்று புறப்பட்டு சென்றது.கொரோனா தொற்றால் கடந்த பல மாதங்களாக சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 8 மாத இடைவெளிக்கு பிறகு பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நேற்று முன்தினம் முதல் சென்னைக்கு விமான சேவையை தொடங்கியது. லண்டனில் இருந்து 189 பயணிகளுடன் அந்த விமானம் சென்னை வந்தது.