சட்டப்பேரவையில் வீட்டுவசதி, சமூகநலத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது திருப்போரூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி பேசியதாவது: ஆணவ கொலைகள் தடுப்பு சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றிட வேண்டும். குடிநோயாளிகள் உயிரோடு இருந்தாலும் சரி அல்லது அவர்கள் இறந்தாலும் கூட. அவர்கள் மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அதற்கென ஒரு சிறப்பு திட்டத்தை அரசு வகுத்திட வேண்டும்.