சென்னை: சென்னையில் மாநில கல்லூரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையில் ஈகோ பிரச்னை பல வருடங்களாக இருந்து வருகிறது. இவர்கள் கல்லூரிக்கு சென்று வரும்போது ஓடும் ரயில் மற்றும் பஸ்சில் அடிக்கடி ஆயுதங்களுடன் மோதி வந்தனர். இதில் பல மாணவர்கள் வெட்டுக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் இரண்டு கல்லூரி மாணவர்களையும் தகராறு நடக்கும்போதெல்லாம் கைது செய்துவது வழக்கம். இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. இதனையடுத்து நேற்று காலை மேற்கண்ட இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் கல்லூரிக்கு வருகை தந்தனர். பின்னர் கல்லூரி படிப்பை முடிந்து மதியம் வீட்டிற்கு புறப்பட்டனர். இவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்தனர்.