2014, 2015, 2016ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை: உதகமண்டலம் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.கணேஷ் பேசுகையில், ‘‘வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014, 2015, 2016ம் ஆண்டுக்கான பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்து, அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 2017, 2018, 2019ம் ஆண்டு ஆகிய 3 ஆண்டுகளுக்கு ஏற்கனவே புதுப்பிக்க தவறியவர்களுக்கு மாபெரும் ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்தார். அந்த பதிவை புதுப்பித்துக்கொள்ள 3 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது உறுப்பினர் 2014ம் ஆண்டு, 2015, 2016ம் ஆண்டுகளுக்கும் பதிவுகளை புதுப்பிக்க ஏராளமான இளைஞர்கள் தவறியிருக்கிறார்கள். உறுப்பினரின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, ஆலோசித்து நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுப்பினருக்கு தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

Related Stories: