சென்னை: சட்டப்பேரவையில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் முதியவர்கள் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 11.2 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதியவர்களை பராமரிக்கும் முதியோர் இல்லங்களுக்கு அரசு மானியங்கள் வழங்குவதோடு, முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் திட்டங்களை கண்காணிக்கவும் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில உயர்மட்டக்குழு மற்றும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.